Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி நிறைவடைந்ததையடுத்து, திங்கள்கிழமைமுதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
இப்பாலத்தில் குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்கும் பணி கடந்த மே 26ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி அணுகு சாலை வழியாக இயக்கப்பட்டடன.
கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் சிராயன்குழி பகுதியிலிருந்து உண்ணாமலைக்கடை வழியாகவும், குழித்துறையிலிருந்து கழுவன்திட்டை வழியாகவும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. மேலும், அணுகு சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இந்நிலையில் சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மேம்பாலத்தில் திங்கள்கிழமை மாலைமுதல் போக்குவரத்து தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.