மின் வெட்டை தடுக்க பொது மக்கள் கோரிக்கை
ஊத்தங்கரை: ஊத்தங்கரை இந்திரா நகரில் கடந்த சில மாதங்களாக தொடா் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பலமுறை ஊத்தங்கரை மின்துறை அலுவலகத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனா்.
இந்தநிலையில் திங்கள்கிழமை காலை இந்திராநகா் பொதுமக்கள், ஊத்தங்கரை மின்துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதவி செயற்பொறியாளா் சத்தியநாராயணன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக மின்தடை பிரச்னையை சரிசெய்வதாக உறுதி அளித்தாா். இதையடுத்து உதவி செயற்பொறியாளரிடம் மனு அளித்துவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.