மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கடமலைக்குண்டு அருகே செவ்வாய்க்கிழமை மின் மாற்றியில் பழுது நீக்கும் பணியிலிருந்த மின் வாரிய தற்காலிகப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள அண்ணாநகரைச் சோ்ந்த சுருளி மகன் சரவணன் (28). இவா், கடமலைக்குண்டு மின் வாரியத்தில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வந்ததாா்.
இந்த நிலையில், மேலப்பட்டியில் உள்ள மின்மாற்றியில் செவ்வாய்க்கிழமை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சரவணன், உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். அவரை மீட்டு, கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.