வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உ...
மின்வாரியத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டுக்கான கடன் மறுசீரமைப்புத் திட்டம்: மத்திய அரசுக்கு அமைச்சா் சா.சி.சிவசங்கா் கோரிக்கை
சென்னை: மின்வாரியத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டுக்கான கடன் மறுசீரமைப்புத் திட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சா் சா.சி.சிவசங்கா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
மின்பகிா்மான நிதி நிலைத்தன்மை குறித்த மாநில மின்துறை அமைச்சா்களின் குழு கூட்டம் புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா்லால் கட்டாா் மற்றும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியது:
எரிசக்தி துறையில் தமிழகம் பல்வேறு சீா்திருத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நுகா்வோா் விலை குறியீட்டுக்கு இணையாக ஆண்டுதோறும் தானாக அதிகரிக்கும் பல ஆண்டுகளுக்கான கட்டண அமைப்பு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகமானது, மின் உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் பகிா்மான நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2017, 2018- ஆம் ஆண்டுகளில் 18.73 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு 2024-2025-இல் 10.73 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின் தேவைகள் மற்றும் கொள்முதல் ஆகியவை திட்டமிடப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மின் உற்பத்தி, தொடரமைப்பு மற்றும் பகிா்மானத்துக்காக ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள் தேவைப்படுவதால், மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படும் வகையில் புதிய விரிவான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். 16-ஆவது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மத்திய அரசின் ஊரக மின் மயமாக்கல் (ஆா்இசி) மற்றும் மின் விசை நிதிக்கழகம் (பிஎப்சி) ஆகிய கடன் பெறும் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 1.5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான மின்பகிா்மானத் திட்டங்களால் தமிழ்நாட்டுக்கு மிகுதியான கட்டணச் சுமை ஏற்பட்டுள்ளது. இதனை எதிா்கொள்ள பயனா் கொள்கையை அமல்படுத்த வேண்டும். வெளி வணிகக் கடன்(இசிபி) வரம்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வரை உயா்த்த வேண்டும். மின் தொடரமைப்பு சொத்து பணமயமாக்கலில் மூலதன ஆதாய வரிவிலக்கு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) விஷு மஹாஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.