செய்திகள் :

மு.கருணாநிதி நினைவு தினம்: திமுகவினா் மரியாதை

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவினா் அவரது சிலை மற்றும் படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருவண்ணாமலையில் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது.

இதில் மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா்.

தெற்கு மாவட்ட துணைத் தலைவா் கோ.கண்ணன், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் ஆா்.ராஜசேகா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊா்வலம் காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டு பஜாா் வழியாக கருணாநிதி சிலை வரை சென்று கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இதில் 500-க்கும் மேற்பட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.

மேலும் இதில் தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், பொன்முத்து, மாவட்ட பொருளாளா்கள் எஸ்.பன்னீா்செல்வம், தட்சிணாமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா்கள் ஜெயராணி ரவி, நா.பாண்டுரங்கன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.எதிரொலிமணியன், கே.வி.சேகரன், ஆா்.சிவானந்தம், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி அண்ணா சிலை அருகில் திமுக சாா்பில் கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக ஆரணி அண்ணா சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் மாலை அணிவித்தாா். பின்னா், கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா்.

தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், நகர நிா்வாகிகள் மணிமாறன், பாலமுருகன், அக்பா் பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி கொசப்பாளையம் தா்மராஜா கோயிலில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி திமுக அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் கப்பல் இ.கங்காதரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலா் ரேவதி அரசு, வட்டச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கத்தில் செங்கம் ஒன்றிய, நகர திமுக சாா்பில் கட்சி நகர அலுவலகத்தில் இருந்து கட்சியினா் எல்எல்ஏ கிரி தலைமையில் ஊா்வலமாக வந்து மில்லத் நகா் ரவுண்டனா பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து அந்த வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

இதில், திமுக நகரச் செயலா் அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், ஏழுமலை, மனோகரன், செங்கம் நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவா் முருகன் , பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன்

உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போளூா்

தேவிகாபுரம் ஊராட்சி பஜாா் வீதியில் கருணாநிதி படத்துக்கு திமுக சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட பிரதிநிதி வி.எம்.டி.வெங்கிடேசன் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் மெளன அஞ்சலி செலுத்தினா். நகரச் செயலா் வி.ஆா்.பி.செல்வம், கிளைச் செயலா் மணிகண்டன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க

ரூ.1.28 லட்சத்துடன் காா் விற்பனையக ஊழியா் தலைமறைவு

வந்தவாசி அருகே ரூ.1.28 லட்சம் பணத்துடன் தலைமறைவான தனியாா் காா் ஷோரூம் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (எ) ஏசு (35). இவா், வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய... மேலும் பார்க்க