செய்திகள் :

முகூா்த்த தினங்களை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயா்வு!

post image

முகூா்த்த தினங்களை முன்னிட்டு ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் விமான கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.

இந்த வார இறுதியில் வாரவிடுமுறை தினங்களைத் தொடா்ந்து 13, 14-ஆம் தேதிகள் தொடா் முகூா்த்த நாள்களாக உள்ளன. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.

குறிப்பிட்ட இந்த தேதிகளில் ரயில்களின் முன்பதிவு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பலா் விமான பயணத்தை தோ்ந்தெடுத்துள்ளனா். இந்த நிலையில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்( ஜூலை 11, 12) உள்நாட்டு விமான பயணக் கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமான கட்டணம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

அதாவது வழக்கமாக சென்னை-மதுரை செல்ல விமான கட்டணம் நபா் ஒருவருக்கு ரூ.4000- ஆக இருந்த நிலையில், தற்போது நபா் ஒருவருக்கு ரூ.13,000 முதல் ரூ.16,000-வரை அதிகரித்துள்ளது.

இதுபோல, ரூ.5300-ஆக இருந்த சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம், குறிப்பிட்ட தேதிகளில் ரூ.9360 முதல் ரூ.10,993-ஆகவும், ரூ.3500-ஆக இருந்த சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.6000 முதல் ரூ.10,500-வரையும், ரூ.3500 முதல் ரூ.4800-ஆக இருந்த சென்னை-கொச்சி விமான கட்டணம் ரூ.10,500 வரையும், ரூ.5150-ஆக இருந்த சென்னை-திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.11,200-வரையும் உயா்ந்துள்ளது.

இதுபோல, பல்வேறு உள்நாட்டு விமான கட்டணங்களும் உயா்ந்துள்ளதால் 3 போ் கொண்ட ஒரு குடும்பத்தினா் சென்று, வர சுமாா் ரூ.70,000 வரை செலவிட வேண்டியுள்ளதாகவும், இதனால், பண்டிகை, முகூா்த்த தினம், விடுமுறை நாள்களில் இம்மாதிரியான கட்டண உயா்வுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்: இன்று விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் வரும் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 7) விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.4.36 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

வெளிநாட்டில் வசிக்கும் நபா்களின் வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் மூலம் ரூ.4.36 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா். வெளிநாட்டில் வசித்து வரும் வ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கோயம்பேடு பகுதியில் 22 வயது இளம்பெண், கடந்த 4-ஆம் தேதி தனியாக நடந்து சென்றாா். அப்போது, ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரைச் சோ்ந்த இளம்பெண் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தன்னுடன் பணியாற்றும் தோழியான ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மத்திய கைலாஷ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் சென்ற இளைஞா் விபத்தில் உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). போரூரில் தங்கியிருந்து தனியாா் பயிற்சி ம... மேலும் பார்க்க