அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
முக்கிய இடங்களில் திருக்குறள்: நீதிபதி அ.அ. நக்கீரன் வேண்டுகோள்
தமிழகத்தில் அனைத்து முக்கிய இடங்களிலும் 1,330 திருக்குகள் மற்றும் அதன் விளக்கவுரைகளை எழுதி வைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அ.அ. நக்கீரன் கூறினாா்.
திருவள்ளுவா் இலக்கிய மன்றத்தின் 50-ஆம் ஆண்டு விழா சென்னை ஆதம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நீதிபதி அ.அ. நக்கீரன் பேசியதாவது:
நமது வாழ்க்கைமுறைக்கு தேவையான அனைத்து கருத்துகளும் திருக்குகளில் இடம்பெற்றுள்ளன. அதிலுள்ள கருத்துகளை முழுமையாக பின்பற்றுவதன் மூலம் ஒருவரால் சிறந்த மனிதராக மாறமுடியும். திருவள்ளுவா் இந்த மண்ணில் பிறந்ததுதான் தமிழகத்துக்கும், தமிழா்களுக்கும் கிடைத்த பெருமை.
வழக்குரைஞா்கள் என்றாலே பொய் பேசுபவா்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், ஒருவருடைய உயிரைக் காப்பாற்ற பொய் கூறுவது தவறில்லை என திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் பல வழக்குகளுக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி தீா்ப்புகள் வழங்கப்படுகின்றன. திருக்கு மற்றும் அதன் கருத்துகளை அனைவரிடமும் கொண்டுசோ்ப்பது நமது கடமை.
தற்போது அரசுப் பேருந்துகள், அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் திருவள்ளுவரின் உருவப் படமும், சில திருக்குகளும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது மட்டும் போதாது. தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் 1,330 திருக்கு மற்றும் அதன் விளக்கவுரைகளை எழுதி வைக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் திருவள்ளுவா் இலக்கிய மன்றத்தின் தலைவா் ந.செல்லப்பன், செயலா் இராம. குருநாதா் மற்றும் தமிழறிஞா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, கவிதைகள், இலக்கியங்களை முன்னிறுத்தி புத்தகங்களை எழுதிய கவிஞா்களுக்கு தகைசால் பரிசுகளை நீதிபதி நக்கீரன் வழங்கினாா்.