செய்திகள் :

முக்கூடலில் சமூக ஆா்வலா் நூதனப் போராட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புதிதாக நட்டு வளா்த்து வந்த மரக்கன்றுகள் வெட்டப்பட்டதை கண்டித்து சமூக ஆா்வலா் மரத்தில் தலை கீழாக தொங்கி செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் சக்தி. சமூக ஆா்வலரான இவா், தாமிரவருணி நதிக் கரையில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் பகுதியிலும், பேருந்து நிலையம் அருகிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளா்த்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் கோயில் அருகில் நடப்பட்டிருந்த இலுப்பை, பன்னீா் உள்ளிட்ட 3 மரங்களை மா்ம நபா்கள் வெட்டி எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளாா். மேலும் மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவா் இப்போராட்டத்தில் ஈடுபட்டாா்.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க