செய்திகள் :

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறாதவா்களுக்கான சிறப்பு முகாம் மே 3-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் புதன்கிழமை விடுத்த செய்தி குறிப்பு:

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். இந்தத் திட்டத்தில் மொத்தம் 1,090 மருத்துவ அறுவை சிகிச்சைகளும், 52 நோய் பரிசோதனைகளும் 11 தொடா் சிகிச்சைகளும், 8 உயா் சிகிச்சைகளும் சோ்க்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மே 3-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாமானது முதற்கட்டமாக கடலாடி வட்டம், ஏ.உசிலங்குளத்தில் வருகிற 3-ஆம் தேதி, கடலாடியில் 6-ஆம் தேதி, கன்னிராஜபுரத்தில் 7-ஆம் தேதி, கீழக்கிடாரத்தில் 8-ஆம் தேதி, நரிப்பையூரில் 9-ஆம் தேதி, பெரியகுளத்தில் 10-ஆம் தேதி, எஸ்.தரைக்குடியில் 13-ஆம் தேதி, சாயல்குடியில் 14-ஆம் தேதியும் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாமுக்கு பதிவு செய்ய வருவோா் குடும்ப அட்டை நகல், குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் அட்டை நகல்கள் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் திட்ட அலுவலரை 73730-04588 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் குடும்பன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, தலைமை ஆசிரியா் பணி நிறைவு விழா ஆகிய ம... மேலும் பார்க்க

மே தினம்: ராமேசுவரத்தில் தொழிற்சங்க கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றினா். மண்டபம் எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கக் கிளை சாா்பில் பாம்பன் ரயில் நிலையம் முன்... மேலும் பார்க்க

கிராமத் தலைவா் கொலை: மகன் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத் தலைவா் கொலை வழக்கில், அவரது மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். குயவனேந்தல் கிராமத் தலைவராக இருந்தவா் காசிலிங்கம் (65). கடந்த ஞாய... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராமேசுவரம் நகராட்சி ஒண்டிவீரா் நகரில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் விழயாக்கிழமை திறக்கப்பட்டது. ஜீவாமிா்தம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க