செய்திகள் :

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

post image

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது:

நடப்பாண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 22-ஆம் தேதி தொடங்குகின்றன. இதற்கான இணையதள முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இது வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், 25 வகையான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், 7 வகையான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், 37 வகையான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை சிறந்த முறையில் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட அளவிலான முன்பதிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. அரவிந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நல அலுவலா் ரமேஷ்கண்ணன், பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச... மேலும் பார்க்க

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.திருப்பத்தூா் அருகே தேவாரம... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: இருவா் காயம்

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 2 போ் காயமடைந்தனா்.சிவகங்கை நகா் 48 காலனி பொதுமக்கள் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரச... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: சிங்கம்புணரியில் சிறப்பு அன்னதானம் 40 ஆயிரம் போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தா் முத்து வடுகநாதா் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருபூஜையும், அன்னதான விழாவும் நடைபெற்றன.இங்கு சிங்கம்புணரி வணிக... மேலும் பார்க்க

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகா் காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோர... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க