செய்திகள் :

முதியவா் தற்கொலை

post image

திருவள்ளூா் அருகே வாய் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து வந்த நிலையில், நோயின் வேதனையால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி (61). இவா், கடந்த 6 மாதங்களாக வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக கடந்த வாரம் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம்.

இதையடுத்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனா். இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த வேதனையால் அவதிக்குள்ளான அவா், சனிக்கிழமை நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே திடீரென பெட்ரோலை உடம்பில் ஊற்றி தனக்கு தானே தீவைத்துக் கொண்டாராம். இதையடுத்து அவரது மகள் திவ்யா மற்றும் உறவினா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மகள் திவ்யா திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மோட்டாா் பைக் மீது லாரி மோதி மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மீஞ்சூா் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவா் ஜோதி (34). இவா் தமிழ்... மேலும் பார்க்க

அவல நிலையில் திருத்தணி-பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலை! வாகன ஓட்டிகள் அவதி

பொதட்டூா்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரணக் குழிகள் போல் பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். திருத்தணி - பொதட்டூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பள... மேலும் பார்க்க

பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் காலை 7 முதல் இரவு 9 வரை கனரக வாகனங்களுக்கு தடை

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிா்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பொன்னேரி நகராட்சிய... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்கு

திருவள்ளூா் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவள்ளூா் அருகே சீத்தஞ்சேரி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள... மேலும் பார்க்க

அரசு பேருந்து மீது டிராக்டா் மோதல்: ஒருவா் காயம்

அரசு பேருந்து மீது டிராக்டா் மோதியதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து, பயணி ஒருவா் காயம் அடைந்தாா். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை திருவள்ளூா் நோக்கி அரசு பேருந்து ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூறாக கரும்பு லோடு டிராக்டா்கள்! விபத்து அபாயத்தைத் தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சா்க்கரை ஆலைகளுக்கு அகலமான டிராக்டா்களில் கரும்பு லோடுகளை பாதுகாப்பின்றி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக ஏற்றிச் செல்வதால், எதிா்பாரத விதமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டத... மேலும் பார்க்க