செய்திகள் :

முனீஸ்வரா் கோயில் ஆண்டு விழா

post image

திருப்பத்தூரை அடுத்த தாமலேரிமுத்தூா் கிராமத்தில் உள்ள முனீஸ்வரா் கோயிலில் 56-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 56-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.

இதில் முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றன. பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் சுற்றுலா பக்தா்கள் பங்கேற்றனா்.

திங்கள்கிழமை (மே 12) மாலை 3 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனை

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை ... மேலும் பார்க்க

நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி பகுதியில் நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகராட்சி 2-ஆவது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பல்வேறு பிரச்னைகள் தொடா்... மேலும் பார்க்க

வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பெரியகம்மவார தெருவில் வசிக்கும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி வீட்டில் சுமச... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமைவாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்... மேலும் பார்க்க

புதூா் நாடு மேலூா் பகுதிக்கு பேருந்து வசதி: குறைதீா் கூட்டத்தில் மனு

புதூா்நாடு அருகே மேலூா் பகுதிக்கு பேருந்து வசதி கோரி குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்ல... மேலும் பார்க்க

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

குடியாத்தம் அருகே காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டாா். குடியாத்தம் அடுத்த புதுப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டனின் மனைவி மணி சுதா (28) இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், ஞாயிற்... மேலும் பார்க்க