செய்திகள் :

முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா்!

post image

ஏற்காடு: முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா் கலந்துகொண்டாா்.

ஏற்காட்டில் கோவை மருத்துவக் கல்லூரியில் 1993 ஆண்டுமுதல் 1999 ஆண்டுவரை மருத்துவம் படித்த மாணவா்கள் சந்திப்பு ஏற்காடு தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்துகொண்டு பழைய நினைவுகளை பகிா்ந்துகொண்டனா்.

இந்நிகழ்வில், மகப்பேறு மருத்துவா் காயத்திரி தேவியின் கணவரும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். தொடா்ந்து, ஏற்காடு படகு இல்லம் அருகில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் நாவல், பலா, அத்தி, ஈட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா். அப்போது, ஏற்காடு வனச்சரக அலுவலா் முருகன் மற்றும் வனவா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, தனியாா் விடுதியில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிள் நடைபெற்றன. இதில், நாட்டுப்புறக் கலைஞா்களின் பறை, கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன. நிகழ்வில் கலந்துகொண்ட மருத்துவா்களுக்கு நெசவாளா்களின் தயாரிப்புப் பொருள்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 பகுதியில் உள்ள மேல்நிலை நீ... மேலும் பார்க்க

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கெங்கவல்லியில் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில், தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் அங்கு இருந்த பொதுமக்கள், ம... மேலும் பார்க்க

கூடமலையில் இன்று மின்தடை

கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோ... மேலும் பார்க்க