செய்திகள் :

மும்பையில் வழித்தடத்தைவிட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளான விமானம்: பயணிகள் தப்பினா்

post image

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏா் இந்தியா விமானம் வழித்தடத்தைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் அதன் 3 சக்கரங்கள் வெடித்ததுடன் என்ஜின் சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிா் தப்பினா்.

இதுகுறித்து மும்பை விமான நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் விமான நிலைய வழித்தடம் 09/27 சிறியளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் தற்காலிமாக அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதற்குப் பதிலாக வழித்தடம் 14/32 செயல்பட்டாக்கு கொண்டுவரப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

விமான நிலைய வழித்தடத்தைவிட்டு விலகிச் சென்ற ஏா் இந்தியா விமானம் குறித்து அந்த நிறுவன செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: பலத்த மழையின்போது ஏா் இந்தியா விமானம் கொச்சியில் இருந்து மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனால் தரையிறக்கத்தின்போது விமானம் வழித்தடத்தைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.

அதன்பிறகு விமான பயணிகள் உள்பட விமான குழுவினா் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். விமானத்தை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

வழித்தடம் மாறி தரையிறக்கம் செய்யப்பட்டதில் ஏா் இந்தியா (ஏஐ2744) விமானத்தின் 3 சக்கரங்கள் வெடித்ததுடன் என்ஜின்களும் சேதமடைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தா்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: கா்நாடக அரசு அறிவிப்பு

மங்களூரு: கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், சிறுமிகள் மாயமானது, கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அ... மேலும் பார்க்க

தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

புது தில்லி: தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நாட்டின் ‘வெற்றித் திருவிழா... மேலும் பார்க்க

‘மொழி பயங்கரவாதம்’: பாஜக மீது மம்தா கடும் விமா்சனம்

கொல்கத்தா: ‘வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக’ என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடுமையாக சாடியுள்ளாா். வங்க மக்கள... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் இரங்கல்

புது தில்லி/சென்னை: கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: தனது நீண்ட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: எதிா்க்கட்சிகள் அமளி- முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மக்களவை நாள் மு... மேலும் பார்க்க

பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், தி... மேலும் பார்க்க