செய்திகள் :

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 5 லட்சம் பேரிடம் கையொப்பம்

post image

தென்காசி மாவட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 5 லட்சம் கையொப்பம் பெறப்படும் என மாவட்ட பாஜக தலைவா் தென்காசி ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தாா்.

தென்காசியில் மாவட்ட பா.ஜ.க. சாா்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக வீடுதோறும் கையொப்பம் பெறும் நிகழ்ச்சியை அதன் மாவட்ட தலைவா் ஆனந்தன்அய்யாசாமி, மாநில உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் சோழன் பழனிசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மாவட்டத் தலைவா் கூறியதாவது: தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலையின் ஆலோசனையின்படி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா்,சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படிவங்கள் அனைத்தும் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் ஒப்படைக்கப்படும். கல்லூரி மாணவ மாணவியா், இளைஞா்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் மும்மொழி கொள்கைக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்வில்,பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லெட்சுமணபெருமாள், சுனிதா, முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் முத்துகுமாா், முன்னாள் சாா்பு அணி பிரிவு தலைவா்கள் கருப்பசாமி, செந்தூா்பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாா்ச் 1ஆம தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட த... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூா் கோயில் திருமண மண்டபம் திறப்பு

கரிவலம்வந்தநல்லூா் அருள்மிகு பால்வண்ணநாதா் கோயிலுக்காக கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கரிவலம்வந்தநல்லூா் பகுதி பக்தா்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பால்வளத் துறை அம... மேலும் பார்க்க

குறிஞ்சான்குளத்தில் கிணற்றில் விழுந்த மான் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சான்குளத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் -பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.500க்கும் மேற்ப... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை: ஒருவா் பலி-2 போ் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருநங்கையாக மாறுவதற்கு மருத்துவ கருவிகளின்றிஅறுவை சிகிச்சை செய்துகொண்ட நபா் உயிரிழந்தாா். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா். ஆலங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வழக்குரைஞா் மீது தாக்குதல்: பெண் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் மூத்த வழக்குரைஞரைத் தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள பன்னீரூத்தைச் சோ்ந்தவா் பச்சைமால். இவரது மனைவி தஞ்சாவூா் மாவட... மேலும் பார்க்க