செய்திகள் :

``முறைகேடு; அழுத்தம்.. நல்வழிகாட்ட யாரும் இல்லை'' - உயிரை மாய்த்த பொதுப்பணித்துறை அதிகாரி கடிதம்

post image

அசாம் மாநில பொதுப்பணித்துறையில் (PWD) ஜூனியர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த குவஹாத்தி பகுதியைச் சேர்ந்த ஜோஷிதா தாஸ் என்ற 26 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய கடைசிக் கடிதத்தில், "என் வேலையில் ஏற்பட்ட மிகுந்த மன அழுத்தம் காரணமாக இந்தத் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறேன். அலுவலகத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன்.

ஜோஷிதா தாஸ்

மேல் அதிகாரிகளான SDO இஸ்லாம் மற்றும் நிர்வாகப் பொறியாளர் மேதி இருவரும் பாலம் உள்ளிட்ட கட்டுமானம் தொடர்பாக முடிக்கப்படாத, முறைகேடான இரண்டு ப்ராஜெக்ட்களின் ஆவணத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு என்னை வற்புறுத்தினர்.

அதை நான் மறுத்ததால் என்னை கடந்த மூன்று மாதங்களாக மன ரீதியாகத் துன்புறுத்தி வந்தனர். அலுவலகத்தில் பணி செய்யவிடாமல் அழுத்தம் கொடுத்தனர். அலுவலகத்தில் எனக்கு நல் வழிகாட்ட யாரும் இல்லை. எவ்வளவோ முயற்சித்தும் அதிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை.

இப்படியான மன அழுத்தம் காரணாமாக இந்தத் தற்கொலை முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னை இழந்து தவிக்கும் என் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

ஜூனியர் இன்ஜினியராகப் பணியாற்றிய ஜோஷிதா தாஸ் தற்கொலையைத் தொடர்ந்து, இதுபோன்ற முறைகேடுகளும், அதற்கு ஒத்துழைக்காதவர்களுக்கு சில அதிகாரிகள் பெரும் மன அழுத்தங்கள் கொடுப்பதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "இந்த விவாகரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறோம். முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் கட்டிடம் குறித்த ஆவணங்கள் பற்றி விசாரணை நடித்தப்படும். அலுவலங்களில் கொடுக்கப்படும் மன அழுத்தம் தொடர்பாகவும் ஆராய்ந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்திருக்கிறர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Today Roundup: மோடி தமிழ்நாடு வருகை டு சேரனின் ராமதாஸ் பயோபிக் | Headlines

இன்றைய நாளின் (ஜூலை 25) முக்கியச் செய்திகள்!*முதல்வர் மு.க.ஸ்டாலின்: பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (BiharSIR) கைவிட வேண்டும். முழுவீச்சில் தமிழ்நாடு இதற்கு எதிராகப... மேலும் பார்க்க

Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படுகின்றது.இந்த ... மேலும் பார்க்க

OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அதிரடி நடவடிக்கையும்!

ஆபாசம் நிறைந்த வசனங்கள், காட்சிகள், காணொலிகள் இருப்பதாகக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 25 ஓடிடி செயலிகளுக்குத் தடைவிதித்திருக்கிறது. சில ஓடிடி செயலிகள் ஆபாசமான காணொலிகள், வெப்சீரிஸ், ... மேலும் பார்க்க

Kamal Haasan: ``காந்தி, அம்பேத்கர், பெரியாரின் எண்ணங்கள் என் நரம்புகளில் ஓடுகிறது. ஆனால்..!" - கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சா... மேலும் பார்க்க

Kamal Haasan: ``கமல்ஹாசன் எனும் நான்... கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்" - மாநிலங்களவையில் கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்!

பிரதமர் மோடி மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக தொடர் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இப்போ... மேலும் பார்க்க