செய்திகள் :

முல்லான்பூரில் ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் போட்டிகள்..! பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள்!

post image

ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் (மே.27) நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக பிளே-ஆஃப்ஸ் போட்டிகள் (குவாலிஃபயர் 1, எலிமினேட்டர்) பஞ்சாபின் முல்லான்பூரில் நடைபெறவிருக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் மோதலின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டன.

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.

இந்தச் சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாபை குறிப்பாக அமிர்தசரை குறிவைக்க முயற்சித்தது. இந்திய ராணுவத்தின் சாதுரியத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினாலும் முறியடிக்கப்பட்டது.

இது குறித்து பஞ்சாபின் சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி அதிகாரி அர்பித் சுக்லா கூறியதாவது:

முல்லான்பூரில் நாளை (மே.29), நாளை மறுதினம் (மே.30) முக்கியமான போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. அவை குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள்.

இந்தியாவின் அனைத்து பாகங்களில் இருந்தும் மக்கள் இந்தப் போட்டியைப் பார்க்க ஆவலுடன் வருவார்கள்.

முல்லான்பூர் திடலைச் சுற்றிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று (மே.28) அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முல்லான்பூரில் அரசிதழில் பதிவு பெற்ற 65 அதிகாரிகளுடன் 2,500க்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கவரும் ரசிகர்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். அதே நேரத்தில், சோதனைகள் கடுமையாக இருக்கும். காவலர்களுக்கான மாக் ட்ரில் பயிற்சிகள் நேற்றும் இன்றும் இதற்கான மேற்கொள்ளப்பட்டன என்றார்.

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி!

குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் இ... மேலும் பார்க்க

ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் க... மேலும் பார்க்க

ஆர்சிபி அபார பந்துவீச்சு; விக்கெட்டுகளை இழந்து திணறும் பஞ்சாப் கிங்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டி... மேலும் பார்க்க

குவாலிஃபையர் 1: ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஜோஸ் ஹேசில்வுட்!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல்... மேலும் பார்க்க

ஐபிஎல் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ்: மும்பையை வீழ்த்துமா? மும்பையிடம் வீழுமா?

ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீச... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் வெற்றி சதவிகிதம்..! ஆர்சிபிக்கு 7-ஆவது இடம்!

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் ஒவ்வொரு அணிகளின் வெற்றி சதவிகிதம் குறித்த பட்டியலில் ஆர்சிபி 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மும்பை, சிஎஸ்கே தலா 5 கோப... மேலும் பார்க்க