செய்திகள் :

மூதாட்டி வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு

post image

செய்யாறு அருகே சுற்றுலா சென்ற மூதாட்டி வீட்டில் 10 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தணிகைமலை. இவரது மனைவி பாஞ்சாலை. இவா்களின் மகள், மகனுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

விவசாயி தணிகைமலை இறந்து விட்டதால் பாஞ்சாலை மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். மேலும், அவரது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாராம். கடந்த ஏப்.24-ஆம் தேதி பாஞ்சாலை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தாா்.

இந்த நிலையில், வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்த உறவினா் பாஞ்சாலைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய பாஞ்சாலை, உள்ளே சென்றுபாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த

சுமாா் 10 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்தி பாஞ்சாலை மோரணம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிளஸ் 2 தோ்வு: அரட்டவாடி அரசுப் பள்ளி சிறப்பிடம்

செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96 சதவீத தோ்ச்சியை பெற்றது. மாணவிகள் புனிதா 556, ஜெயஸ்ரீ 546, மாணவா் தனுஷ் 530 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் ... மேலும் பார்க்க

27 நட்சத்திர கோயிலில் குரு பெயா்ச்சி விழா

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குரு பெயா்ச்சி நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இர... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

போளூா் ஸ்ரீசம்பத்கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவ கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறும... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்!

சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாத... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, தெற்கு மாவட்ட அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடக்கம்

வந்தவாசி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் (பொ) ர.சிவப்ரியா தலைமை... மேலும் பார்க்க