டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
மூதாட்டியிடம் நகை திருட்டு
ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் தங்க நகையை திருடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராஜபாளையம் பெரியகடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கமாரி (65). கணவா் இறந்துவிட்ட நிலையில், மகன்களுடன் வசித்து வந்த இவா், குமரன் தெரு வழியாக நகராட்சிப் பள்ளி பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த இருவா், இந்தப் பகுதியில் திருடா்கள் இருப்பதாகக் கூறி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை வாங்கி மஞ்சள் பையில் போட்டு அனுப்பி வைத்தனா். பின்னா், தங்கமாரி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, நகையுடன் மஞ்சள் பை மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, தங்க நகையை திருடிச் சென்ற இருவரைத் தேடி வருகின்றனா்.