செய்திகள் :

மூதாட்டியை சாலையில் வைத்து மறியல்

post image

கொளத்தூா் அருகே மூதாட்டியை சாலையில் வைத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொளத்தூா் ஒன்றியம், மேட்டு காவேரிபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி மனைவி சரசு (90). இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். சரசுக்கு 1988-ஆம் ஆண்டு மேட்டு காவிரிபுரத்தில் 3 சென்ட் நிலம் அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த பழனியம்மாள் தரப்பினா் ஆக்கிரமித்துக் கொண்டனா். நிலத்தை மீட்டுத்தரக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், ஆக்கிரப்பு நிலத்தை மீட்டுத்தரக் கோரி, உறவினா்கள் மூதாட்டி சரசுவை கட்டிலில் வைத்து கொளத்தூா் - மைசூரு சாலையில் காவேரிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், கொளத்தூா் - மைசூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த கொளத்தூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக சரசு தரப்பினா்மீதும், அரசு ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பழனியம்மாள் தரப்பினா்மீதும் கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 4 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு

சேலம் சரகத்தில் 4 உதவி காவல் ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வுபெற்றனா். தமிழகம் முழுவதும் 78 காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அவா்களுக்கு மண்டலம் வாரியாக பணியிட... மேலும் பார்க்க

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது என எல்ஐசி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் 36-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சேலத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (48). இவா் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆத்தூா் தெற்கு ... மேலும் பார்க்க