செய்திகள் :

மூத்தக் குடிமக்களின் தேவைகளுக்கான கைப்பேசி செயலி

post image

மூத்தக் குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ் மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலி senior citizen app (கைப்பேசி செயலி) செயல்பட்டு வருகிறது. இதில் மூத்தக் குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோா் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவா்கள் குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, மூத்தக் குடிமக்கள் இந்த கைப்பேசி செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

திருவாய்மூா் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு பூஜை

திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தவிடங்க தலங்களில் ஒன்றான தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயி... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் மாரடைப்பால் காலமானாா்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சி ப.கொந்தகையை சோ்ந்தவா் காா்மேகம் (54) (படம்). இவா் நாகூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இவருக்கு இருதய வலி ஏற்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: ஓ.எஸ். மணியன்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமைச்சா் ஒ.எஸ். மணியன் கூறினாா். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்டச் செயலா் மஞ்சுளா சந்திரமோகன், அக்கட்சியின் மாநில... மேலும் பார்க்க

பரவை காய்கனிச் சந்தை ரூ. 20.10 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது

நாகப்பட்டினம், ஜூன் 19: பரவை காய்கனிச் சந்தை ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூா் அருகே ப... மேலும் பார்க்க

கழிமுகப் பகுதியில் அகற்றப்படாத ஆகாயத் தாமரைகள்

நமது நிருபா் நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக வளா்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை தாமதமாதி வ... மேலும் பார்க்க

ஐடிஐயில் சேர விண்ணப்பிக்காலம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை, திருக்குவள... மேலும் பார்க்க