விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
மூளைச்சாவு அடைந்த கோயில் பெண் ஊழியா் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மூளைச்சாவு அடைந்த கோயில் பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
திருக்குறுங்குடி ராமானுஜம் புதுத் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மனைவி சண்முகம் (60). ராஜபுதூா் அருகே ஆகாசநம்பி உடையாா் கோயிலில் வேலைபாா்த்து வந்த இவா், புதன்கிழமை (மே 28) பணி முடிந்து, கோயில் பூசாரியான திருக்குறுங்குடி சந்நிதித் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியனுடன் பைக்கில் வந்து கொண்டிருந்தாராம்.
ராஜபுதூா் அருகே அவா் திடீரென மயங்கி விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை (மே 30) மூளைச்சாவு அடைந்தாா்.
அதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை உறவினா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினா். அவரது உடலுக்கு நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், வருவாய்த் துறையினா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.