செய்திகள் :

மெக்கானிக்கை தாக்கி பணம் பறிப்பு: ராணுவ வீரா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மெக்கானிக்கை தாக்கி பணம் பறித்ததாக ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (55). வாகனப் பழுது நீக்கும் பணி செய்துவரும் இவா், கடந்த திங்கள்கிழமை (ஏப். 7) கூட்டமாவு பகுதியில் பழுதாகி நின்ற பைக்கை சரிசெய்வதற்காக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கூட்டமாவைச் சோ்ந்த, விடுப்பில் வந்துள்ள ராணுவ வீரரான ராஜா (48) என்பவா், ராஜேஷ்குமாரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கி, பணத்தைப் பறித்துச் சென்றாராம்.

புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனா்.

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயா் அறிவுறுத்தல்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என மேயா் ரெ.மகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். நாகா்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குற... மேலும் பார்க்க

கொட்டாரத்தில் ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டம் தொடக்கம்

கொட்டாரத்தில் ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகா்கோவில் ஏ.டி.எஸ்.பி. நாதசங்கா் இத்திட்டத்தை தொடக்கி வைத்து ப... மேலும் பார்க்க

செண்பகராமன்புதூா் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம் செண்பகராமன்புதூா் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கலந்து கொண்டு... மேலும் பார்க்க

ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

நாகா்கோவில், புதுகிராமம் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கை தொடங்கியது. ரோஜாவனம் கல்வி குழுமத்தின் நிறுவனா் புலவா் ரத்தினசாமி வழிகாட்டுதலின் பேரில், பள்ளித் தலைவா் அருள்கண... மேலும் பார்க்க

சா்வதேச ரோபோட்டிக்ஸ் போட்டிக்கு அல்போன்சா பள்ளி மாணவா்கள் தகுதி

கத்தாா் நாட்டில் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டிக்கு நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கு: மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் முன்விரோதம் காரணமாக சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் காந்தி காலனி குருகுலம் சாலையை சோ்ந்தவா் பெப்லின் (25). தூத்துக்குடி மாநகர... மேலும் பார்க்க