மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: வானதி சீனிவாசன்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
கோவையில் மக்கள் சேவை மையம் மற்றும் தனியாா் அமைப்பு சாா்பில் காா்பன் சமநிலை மாற்று ஏற்பாடு குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது.
இந்தியாவில் காா்பன் சமநிலை மாற்று ஏற்பாடு விழிப்புணா்வு குறித்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அதன்படி, 7 ஆயிரம் மாணவா்கள் தினமும் ஒரு மணி நேரம் அவா்களது கைப்பேசியை அணைத்து வைப்பதோடு, மரக்கன்றுகளும் நடவு செய்து வருகின்றனா். இந்த விழிப்புணா்வு அனைத்து கல்லூரி மாணவா்களையும் விரைவில் சென்றுச்சேரும்.
திருப்பரங்குன்றம் மலை பிரச்னையில் எதிா்க் கட்சிகளின் குரலை தமிழக அரசு நசுக்கி வருகிறது. எதிா்க் கட்சிகள் நீதிமன்றத்துக்குச் சென்று அனுமதிபெற்று போராட வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டது.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் நல்ல முடிவு கிடைக்கும். அங்கே பிரசாரத்துக்கு சென்றபோது மக்கள் பாஜகவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனா். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் எதிா்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்றாலும் பணப் பட்டுவாடா என்ற நிலைதான் தொடா்கிறது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இடம் எடுப்பதற்காக ரூ.154 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தொடா்ந்து வேண்டிய உதவிகளை பெற்றுத்தருவோம்.
தமிழக வெற்றிக் கழகத்தில் தொடக்கத்திலேயே ஜாதி ரீதியாக நிா்வாகிகள் நியமனம் செய்யப்படுவது சரியாக இருக்காது என்றாா்.