Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
மெத்தனால் பயன்பாடு: திருப்பூா் தொழிற்சாலைகளில் சோதனை
திருப்பூரில் ஊத்துக்குளி பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் மெத்தனால் சோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொழிற்சாலைகளில் மெத்தனால் சட்டவிரோதமாக விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக திருப்பூா் கோட்ட கலால் அலுவலா் ஜெய்சிங் சிவக்குமாா், மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் காமராஜ், உதவி ஆய்வாளா் உதயச்சந்திரன், தாராபுரம் மதுவிலக்கு உதவி ஆய்வாளா் லோகநாதன் ஆகியோா் தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்டனா்.
மேலும், கோவை மண்டலம் முழுவதும் சட்டவிரோதமான மெத்தனால் விற்பனை செய்தாலோ பயன்படுத்தினாலோ பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.