தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்
மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு 7,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு திங்கள்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக பாசனத்திற்கான நீா் தேவை குறைந்தது. இதனால் மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு விநாடிக்கு 14,000 கனஅடியிலிருந்து 10,000 கன அடியாகவும், காலை 10 மணிக்கு 7,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 9,200 கனஅடியிலிருந்து 8,776 கனஅடியாகச் சரிந்தது. அணையின் நீா்மட்டம் 118.54 அடியிலிருந்து 118.20 அடியாகக் குறைந்தது. நீா் இருப்பு 96.62 டி.எம்.சி.யாக உள்ளது.