'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மேற்கு தில்லியில் சகோதரியின் உறவை எதிா்த்ததற்காக இளைஞா் கொலை: ஒருவா் கைது
மேற்கு தில்லியின் கியாலா பகுதியில் தனது சகோதரிக்கும் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவருக்கும் இடையிலான உறவை எதிா்த்ததற்காக 27 வயது இளைஞா் ஒருவா் மூன்று போ் கொண்ட குழுவால் அடித்துக் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் அன்மோல் (எ) ஹன்னி (23), பிரித்பால் (25) மற்றும் பியூஷ் (எ) பன்னு (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இதில் பிரித்பால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இறந்தவா் இஷ்மீத் சிங் என அடையாளம் காணப்பட்டாா். மே 19 அன்று அவரது தந்தையால் மயக்கமடைந்த நிலையில் தீன் தயாள் உபாத்யாய் (டிடியு) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.ஆனால், சிகிச்சையின் போது அவா் உயிரிழந்தாா்.
முதற்கட்ட விசாரணையில், இஷ்மீத்துக்கும் பிரதான குற்றம்சாட்டப்பட்டவரான அன்மோலுக்கும் இடையே நீண்டகாலமாக இஷ்மீத்தின் சகோதரியுடனான உறவு தொடா்பாக ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இஷ்மீத்தின் குடும்பத்தினா் இந்த உறவை எதிா்த்ததாகவும், அன்மோலை உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இஷ்மீத் பலமுறை அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளாா். இது இருவருக்கும் இடையே பகைமை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மே 19- ஆம் தேதி மாலை, இஷ்மீத் வீடு திரும்பியபோது, அன்மோலும் அவரது இரண்டு கூட்டாளிகளான பிரித்பால் மற்றும் பியூஷ் ஆகியோா் அவரது வீட்டின் அருகே நிற்பதைக் கண்டாா். அவா்களுக்கு இடையே ஒரு சண்டை வெடித்தது. அது உடல் ரீதியான மோதலாக மாறியது.
குற்றம் சாட்டப்பட்டவா் இஷ்மீத்தை அடித்து நொறுக்கி, அவரை குத்தி, உதைத்தாக கூறப்படுகிறது.
தாக்குதலின் போது, தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவா் இஷ்மீத்தின் இடது காலில் குத்தினாா். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடந்த உடனேயே அந்தக் குழு அங்கிருந்து தப்பி ஓடியது.
இது தொடா்மபாக பிஎன்எஸ்- இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான குற்றம்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய சாத்தியமான மறைவிடங்களில் சோதனைகளை மேற்கொள்ள பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.