செய்திகள் :

மேலநீலிதநல்லூா் கல்லூரியில் முப்பெரும் விழா

post image

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலித நல்லூா் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கல்லூரி தமிழ்த் துறை பசும்பொன் பைந்தமிழ் மன்றம் சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம், ஆய்வு நூல் வெளியீடு, முனைவா் ஹரிஹரனுக்குப் பாராட்டு என முப்பெரும் விழா கல்லூரி முதல்வா் சி. ஹரிகெங்காராம் தலைமையில் நடைபெற்றது.

ம. தி. தா இந்துக் கல்லூரி உதவிப் பேராசிரியா் ரவீந்திரகுமாா் முன்னிலை வகித்தாா். பல்வேறு கல்லூரிகளில் இருந்து உதவிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கினா். சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வழங்கிய பேராசிரியா்களுக்கு கல்லூரி முதல்வா் சான்றிதழ்கள் வழங்கினாா்.

பசும்பொன் பைந்தமிழ் பனுவல்‘ என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது.பின்னா் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.உதவிப் பேராசிரியா் முனைவா் ராஜேந்திரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

பணி நிறைவு பெற்ற பேராசிரியா் வ.ஹரிஹரன் ஏற்புரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் கோ.லில்லி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் கி. செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தமிழில் பெயா் பலகை: தென்காசியில் கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். நகராட்ச... மேலும் பார்க்க

இடைகாலில் அண்ணா தொழிற்சங்க பொதுக்கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின விழா பொதுக்கூட்டம் இடைகாலில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட ... மேலும் பார்க்க

மேலகரத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மேலகரத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, மே மாதம் கோடை விடுமுறையை முழுமையா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, புதன்கிழமை விநாயகா் வீதியுலா ... மேலும் பார்க்க

தென்காசியில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

இலத்தூரில் கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலத்தூா் ஊராட்சியில் தொழிலாளா் தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் முத்துலெட்சுமி தலைமை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே... மேலும் பார்க்க