ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
மேலமெஞ்ஞானபுரத்தில் நிழற்குடை அமைக்க எம்எல்ஏ கோரிக்கை
தென்காசி - திருநெல்வேலி பிரதான சாலையில் மேலமெஞ்ஞானபுரத்தில் சாலையின் இடதுபுறத்தில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம் அண்மையில் மனு அளித்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த மனு:
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூா் ஊராட்சியில் தென்காசி -திருநெல்வேலி சாலையில் மேலமெஞ்ஞானபுரம் கிராமத்தில் சாலையின் இடதுபுறம் பயணியா் நிழற்குடை இருந்தது. நான்குவழிச் சாலை விரிவாக்கத்தின்போது
அகற்றப்பட்டு ராமலிங்கபுரம் பகுதியில் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கெனவே இருந்த இடத்திலேயே நிழற்குடையை அமைக்க வேண்டும் என மேலமெஞ்ஞானபுரம் கிராமத்தினா் போராட்டங்களை அறிவித்தனா். அதையடுத்து, அப் பகுதியில் தற்காலிகமாக பயணியா் நிழற்குடை
அமைக்கப்பட்டது.
தற்போது நெடுஞ்சாலைத் துறையினா், தற்காலிக பயணியா் நிழற்குடையை அகற்றியுள்ளனா். இதனால் மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. எனவே இரு கிராம மக்களிடையே எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வகையில் தென்காசி - திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் மேலமெஞ்ஞானபுரத்தில் சாலையின் இடதுபுறம் புதியதாக பயணியா் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.