செய்திகள் :

மேல்மருவத்தூர் பயணிகளுக்கு நற்செய்தி அளித்த ரயில்வே!

post image

பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் மேல்மருவத்தூரிலும் தற்காலிகமாக வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் (12636) நாள்தோறும் 7.20 மணிநேரப் பயணமாக, காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். தொடர்ந்து, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு (12635) பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடையும். தென்மாவட்ட பயணிகளுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தைப்பூசம், இருமுடி விழாவை முன்னிட்டு பயணிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, மேல்மருவத்தூரிலும் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12636), டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் மதியம் 12.23 - 12.25 மணி வரை 2 நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தலா ரூ. 50,000 செலுத்தினால் விடுதலை! 14 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்த மாதத் தொடக்கத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ... மேலும் பார்க்க

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இன்று மாலை நேரிட்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மேட்டூர் அனல்மின் நிலையத்துக்குள் ஏற்பட்ட விபத்தில் சி... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளியை சந்தித்த முதல்வா் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டத... மேலும் பார்க்க

ஜன.4 முதல் ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை

ஹூப்ளி- ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில் சேவை ஜனவரி 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வரும் 2025ஆம் ஆண்டு ஜன. ... மேலும் பார்க்க

டிச.25 வரை மிதமான மழை: அதிகாலையில் பனிமூட்டம்!

தமிழகத்தில் டிசம்பர் 25 வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை..நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் சில மணிநேரங்கள் மழை பெய்யும்!

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பகல் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு கனமழைக்கான எச்சரிக்... மேலும் பார்க்க