செய்திகள் :

மைசூரு, போடி உள்ளிட்ட 4 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு

post image

கோவை, போடி உள்ளிட்ட விரைவு ரயில்களின் வேகம் ஜூலை 11-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடுக்கு திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வழக்கமாக காலை 5.55-க்கு செல்லும் நிலையில், 25 நிமிஷங்கள் முன்னதாக காலை 5.30-க்கும், பாலக்காடுக்கு 9.30-க்கும் செல்வதற்கு பதிலாக காலை 9.15-க்கும் சென்றடையும்.

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு காலை 8 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் இனி காலை 7.50-க்கு புறப்படும். கோவைக்கு காலை 9.25-க்கு செல்வதற்கு பதிலாக காலை 8.55-க்கு சென்றடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூா் செல்லும் அதிவிரைவு ரயில் திண்டுக்கலுக்கு காலை 5.57-க்கு செல்வதற்கு பதிலாக காலை 5.47-க்கும், மதுரைக்கு காலை 6.40-க்கும், தேனிக்கு காலை 8.03-க்கும், போடிநாயக்கனூருக்கு காலை 8.55-க்கும் சென்றடையும்.

மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் திண்டுக்கலுக்கு காலை 6.17-க்கு செல்வதற்கு பதிலாக காலை 6.03-க்கும், தூத்துக்குடிக்கு காலை 10.35-க்கு செல்வதற்கு பதிலாக காலை 10.15-க்கும் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க