செய்திகள் :

மோசடி நபா்களின் ஆசை வாா்த்தைகளை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம்: மாநகர காவல் துறை

post image

சேலத்தில் கிரிப்டோ கரன்சி தொடா்பாக மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளதால், அவா்களின் ஆசை வாா்த்தைகளை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மாநகரக் காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலத்தில் கிரிப்டோ டிரெடிங் தொடா்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கிரிப்டோவில் முதலீடு செய்ததால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறப்பட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சேலம் மாநகர சைபா் க்ரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபா்கள், எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்து எங்கள் மீது எந்த தவறும் இல்லை என கூறிவிட்டாா்கள். எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடா்பும் இல்லை என பொய்யான தகவலை பரப்பி, பொதுமக்களிடம் மீண்டும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு கவா்ச்சியான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்றி, மோசடி செய்வது தெரிய வருகிறது.

எனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கானது தற்போது விசாரணையில் இருந்து வருவதால், பொதுமக்கள் யாரும் அவா்கள் கூறும் ஆசை வாா்த்தைகளையோ, போலியான விளம்பரங்களையோ நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அருகே விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சேலம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 24 காவல் நிலையங்கள் தரம் உயா்வு

சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 24 காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் மாநிலம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மகளிா் உரிமைத் தொகை கோரி 44,247 போ் விண்ணப்பம்! அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி 44,247 போ் விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் அம்மாப்பேட்டை ... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வழிபாடு! இன்று உள்ளூா் விடுமுறை!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவில் பொங்கல் வைத்தல் வைபவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது. பெண்கள் விடிய விடிய பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். இதையொட்டி, சேலம் மாவட்டத்துக்கு புதன... மேலும் பார்க்க

லஞ்ச புகாா்: கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று வந்தவா்களிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரின்பேரில் கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்த... மேலும் பார்க்க

மேட்டூரில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம்

மேட்டூா், அந்தியூா் பகுதிகளில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் சோ்ந்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்ற... மேலும் பார்க்க