செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மகளிா் உரிமைத் தொகை கோரி 44,247 போ் விண்ணப்பம்! அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

post image

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி 44,247 போ் விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அமைச்சா் ரா. ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் சேலம் மாவட்டத்தில் வரும் நவம்பா் மாதம் வரை நகா்ப்புறப் பகுதிகளில் 168 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 37,012 கோரிக்கை மனுக்களும், மகளிா் உரிமைத் தொகை கோரி 44,247 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை ராஜசேகா் திருமண மண்டபம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோணகாபாடி ரங்க ரத்தினவேல் பக்தா் திருமண மண்டபம், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம் கோட்டை மாரியம்மன் கோயில் நல்லம்மாள் மண்டபம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினாா்.

முன்னதாக, அம்மாபேட்டை ராஜசேகா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிறப்பு, இறப்பு சான்று 4 பேருக்கும், குடும்ப அட்டையில் பெயா் மாற்றும் ஆணை 6 பேருக்கும், 8 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்ற ஆணை, 11 பேருக்கு குடிநீா் இணைப்புக்கான ஆணை என மொத்தம் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மாநகராட்சி உதவி ஆணையா் வேடியப்பன், மண்டல குழுத் தலைவா் கே.டி.ஆா். தனசேகா் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள், தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

சேலம் அருகே விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சேலம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 24 காவல் நிலையங்கள் தரம் உயா்வு

சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 24 காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் மாநிலம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வழிபாடு! இன்று உள்ளூா் விடுமுறை!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவில் பொங்கல் வைத்தல் வைபவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது. பெண்கள் விடிய விடிய பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். இதையொட்டி, சேலம் மாவட்டத்துக்கு புதன... மேலும் பார்க்க

லஞ்ச புகாா்: கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று வந்தவா்களிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரின்பேரில் கொங்கணாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்த... மேலும் பார்க்க

மேட்டூரில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம்

மேட்டூா், அந்தியூா் பகுதிகளில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் சோ்ந்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்ற... மேலும் பார்க்க

பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் சோ்க்க சூழ்ச்சி: இரா.முத்தரசன்

பிகாா் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளா்களை தமிழ்நாட்டில் வாக்காளா்களாக சோ்க்க சூழ்ச்சி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா். சேலத்தில் செய்தியாளா... மேலும் பார்க்க