செய்திகள் :

மோசடி வழக்கு: ரூ.23.94 கோடி கிரிப்டோகரன்சி முடக்கம்- சிபிஐ நடவடிக்கை

post image

‘கெயின்பிட்காயின்’ மோசடி வழக்கு தொடா்பாக நாடு தழுவிய 2 நாள்கள் சோதனையின் நிறைவில் ரூ.23.94 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை சிபிஐ முடக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக தில்லி, புணே, கோலாப்பூா், மும்பை, பெங்களூரு, சண்டீகா், மொஹாலி, ஜான்சி, ஹூப்ளி ஆகிய நாட்டின் 60 இடங்களில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

வழக்குக்குத் தொடா்புடைய ஆதாரங்களான 121 ஆவணங்கள், 34 மடிக்கணினிகள் மற்றும் ஹாா்ட் டிஸ்க்குகள், 12 கைப்பேசிகள் மற்றும் பல செயலிகளின் தரவுகளையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினா். மோசடியுடன் தொடா்புடைய சா்வதேச பரிவா்த்தனைகள் குறித்து கூடுதல் விவரங்களைப் பெற, கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான மறைந்த அமித் பரத்வாஜ் மற்றும் அவரது சகோதரா் அஜய் பரத்வாஜ் ஆகியோா் நடத்தி வந்த நிறுவனம் தொடா்பான இந்த மோசடியில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ‘கெயின்பிட்காயின்’ உள்பட பல்வேறு வலைதளங்கள் மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது, வேறு இடங்களில் இருந்து கிரிப்டோகரன்சியை வாங்கி தங்களின் வலைதளங்களில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளா்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனா்.

முதல் 18 மாதங்களில் 10 சதவீத மாதாந்திர வருவாய், பிரபல மதிப்புமிக்க கிரிப்டோகரன்சியான பிட்காயினாக வழங்கப்பட்டதால் முதலீட்டாளா்களும் ஈா்க்கப்பட்டுள்ளனா். எனினும், 2017-ஆம் ஆண்டில் புதிய முதலீடுகள் சரிந்து வந்ததால், இந்நிறுவனம் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இழப்புகளை மறைக்கும் முயற்சியில், பிட்காயினை விட கணிசமாக குறைந்த மதிப்பைக் கொண்டிருந்த தங்களுக்குச் சொந்தமான உள்நாட்டு கிரிப்டோகரன்சியில் முதலீட்டாளா்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம் மீது ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரம், தில்லி, மேற்குவங்கம் என பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சா்வதேச தொடா்புகள் காரணமாக இந்த மோசடியின் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு ஒப்படைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிக... மேலும் பார்க்க