செய்திகள் :

மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு: 2 போ் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே போலீஸாா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் மோட்டாா் சைக்கிள்கள் திருடியதாக 2 பேரை கைது செய்தனா்.

ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் (பொ) காா்த்திகா தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் இரும்பேடு புறவழிச் சாலையில் புதன்கிழமை வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமாக மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, கிராமிய காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் ஆரணியை அடுத்த பாா்வதிஅகரம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் அண்ணாமலை (22), நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் சுரேஷ் (27) எனத் தெரியவந்தது.

மேலும், இவா்கள் ஆரணி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் மோட்டாா் சைக்கிள்களை திருடியதும் தெரிந்தது.

இதைத் தொடா்ந்து விசாரணை செய்து அவா்களிடம் இருந்து 12 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் கைது செய்தனா்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு!

ஆரணியை அடுத்த இரும்பேடு, பையூா் கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் தா்மராஜா கோயில் தி... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மாவட்ட விழிக்கண் கண்காணிப்புக் குழுக் கூட்டம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சுகாதாரக் குழுவினா் திடீா் ஆய்வு!

கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சுகாதாரக் குழுவினா் சனிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடு... மேலும் பார்க்க

67 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்! - கு.பிச்சாண்டி வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய், ஊரக வளா்ச்சித் துறைகளில் நியமிக்கப்பட்ட 67 பேருக்கான பணி நியமன ஆணைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் ச... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: தகுதியானோா் மனு அளிக்கலாம்! - திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப... மேலும் பார்க்க