செய்திகள் :

யமுனை படித்துறையில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த தில்லி அமைச்சர்!

post image

தேசிய தலைநகர் முழுவதும் உள்ள யமுனை படித்துறைகளில் சிக்னேச்சர் பிரிட்ஜ், ஐடிஓ மற்றும் சாத் காட் முதல் ஓக்லா தடுப்பணை வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார் தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா.

அமைச்சர் வர்மா படகு கிளப்பிலிருந்து சாத் காட் வரை படகில் பயணித்தார். துப்பரவுப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரிகளுடனும் அவர் உரையாடினார் பல்வேறு தளங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தார்.

பிப்ரவரி 25ல் பதவியேற்ற பிறகு, 48 வயதான ஜாட் தலைவர், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை நதிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, தில்லியின் அடையாளமாக யமுனையை மீட்டெடுப்பதாகச் சபதம் செய்தார்.

முந்தைய ஆம் ஆத்மி அரசு தவறான நிர்வாகத்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டிய வர்மாவும், பாஜகவும், சாலைகள், வடிகால் அமைப்புகள் மற்றும் யமுனை நதி உள்ளிட்ட தில்லியின் உள்கட்டமைப்பு மோசமடைந்து வரும் நிலையை விமர்சித்துள்ளனர்.

இதற்கிடையில், தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில்,

யமுனையைச் சுத்தம் செய்வதும் அதன் படித்துறைகளில் சத் பூஜையை எளிதாக்குவதும் கட்சியின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன. சமீபத்திய தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்து, புதிதாக அமைக்கப்பட்ட பாஜக அரசு தனது பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது,

யமுனையை புத்துயிர் பெறச் செய்வதும் சுற்றுலா மையமாக மாற்றுவதும் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

தில்லி ரோஹிணியில் இரு மாதங்களில் காணாமல் சென்ற 39 குழந்தைகள் மீட்பு

கடந்த இரு மாதங்களில் காணாமல் சென்ற 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பாதுக்காப்பாக மீட்கப்பட்டு அவா்களுடைய பெற்றோா்களுடன் சோ்த்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக ரோஹிணி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

இம்பால்/ஷில்லாங்/குவாஹாட்டி : மணிப்பூரில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கத்தால், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது; பொது மக்கள் பீதிக்கு உள்ளாகினா். அஸ்ஸாம், மேகாலயம்... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளத... மேலும் பார்க்க

30 முறை துபை சென்ற நடிகை! தங்கம் கடத்தவா? வெளியான தகவல்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 12.56 கோடி மதிப்புடைய 14. 8 கிலோ தங்கம் கடத்திச் சென்றதாக கன்னட நடிகை ரன்யா ராவ் நேற்று முன்தினம் (மார்ச் 3) கைது செய்யப்பட்டார். சினிமா நடிகை என்ற புகழைப் பயன்படுத்தி ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்களை குடியேற்றும் குஜராத் ஏஜென்டுகள்!

சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகளில் பெரும்பாலானோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகள் குறித்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிடியில் 144 இந்திய மீனவர்கள், 1173 படகுகள்!

குஜராத்தைச் சேர்ந்த 144 மீனவர்களையும் 1173 படகுகளையும் பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மீனவர்கள் கைதுபாகிஸ்தானில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளின் நிலைமை... மேலும் பார்க்க