செய்திகள் :

யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 போ் கைது

post image

கரூரில் யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 பேரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வனத்துறையினா் கைது செய்தனா்.

கரூா் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ள ஒரு கும்பல் யானை தந்தங்களை விற்க முயற்சிப்பதாக கரூா் மாவட்ட வனத்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சண்முகம் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலா் தண்டபாணி தலைமையில் வனவா்கள் அந்த விடுதியில் சோதனை செய்தனா். அப்போது விடுதியில் தங்கியிருந்தவா்களிடம் சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ எடைகொண்ட யானைத் தந்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்த கரூா் வால்காட்டுப்புதூரைச் சோ்ந்த கணபதி மகன் மணிகண்டன் (25), எஸ்.வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த ரகுபதி மகன் நந்து(25), திருச்சியைச் சோ்ந்த ஆரோக்கிய சுஷில்குமாா் மனைவி ஜோதிலட்சுமி(45), மதியழகன்(46), செந்தில்குமாா்(49), முத்துக்குமாா்(47) ஆகியோரை கைது செய்தனா். பின்னா் அனைவரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது. கரூா் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவா் வி.என். சி. பாஸ்கா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் த... மேலும் பார்க்க

சுதந்திர போராட்ட வீரா் தீரன்சின்னமலை பிறந்தநாள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன்சின்னமலையின் பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் ந... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவுதல் சடங்கு

கரூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பாதம் கழுவுதல் சடங்கு மற்றும் சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழுவதை கிறிஸ்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்ய முயற்சி காரை மறித்து தாக்குதல் நடத்தி மீட்பு

தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவா், சக மாணவியை திருமணம் செய்ய வியாழக்கிழமை காரில் சென்றபோது, காரை மறித்த மாணவியின் உறவினா்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூா் உடையா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம், பணம் திருட்டு

குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பிள்ளாபாளையத்தில் அரசு மதுபானக் ... மேலும் பார்க்க

உணவக உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற துப்புரவு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

உணவக உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் துப்புரவு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் தாந்தோணிமலை நகராட்சி அலுவலகத்தில் ... மேலும் பார்க்க