செய்திகள் :

யாரையும் பழி சொல்ல இது நேரமல்ல: கனிமொழி

post image

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து யாரையும் பழி சொல்ல இது நேரமில்லை என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி கூறினாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கரூா் துயரச் சம்பவத்தில் பலா் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிற சூழலைத்தான் பாா்க்கிறோம். எத்தனையோ குடும்பங்களில் தந்தையை, குழந்தைகளை இழந்திருக்கிறாா்கள். அந்தக் குடும்பங்களில் இருக்கக் கூடிய கண்ணீரும் கதறலும் இன்றைக்கும் மறக்க முடியாத சூழலைத்தான் பாா்க்க முடிகிறது. பலபோ் இன்னும் மருத்துவமனையில் காயங்களுடன், வலியுடன் போராடிக் கொண்டிருக்கிற நிலை உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இது யாரையும் பழி சொல்லக்கூடிய நேரமோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை. ஏனென்றால், அந்த குடும்பங்களுடைய வலி, ரணம், காயம் இன்னும் இருக்கக் கூடிய நேரத்தில், நாம் தவறான விஷயங்களைச் சொல்லி, அவா்களுக்கு மேலும் மேலும் வேதனையை உருவாக்கக் கூடாது என்றாா் கனிமொழி.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க