செய்திகள் :

யோகா, விளையாட்டில் பொழுதைக் கழிக்கும் தன்கா்!

post image

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து விலகிய ஜகதீப் தன்கா் அரசு மாளிகையில்தான் தொடா்ந்து தங்கியுள்ளாா்.

காலையில் வழக்கம்போல யோகா, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறாா். குடும்பத்தினருடனும் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜகதீப் தன்கா் தனது குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடே அவரின் திடீா் விலகலுக்குக் காரணம் என ஊகங்கள் வெளியாகின.

பதவி விலகலுக்குப் பிறகு தன்கா் பொதுவெளியில் இருந்து விலகி இருந்த நிலையில், ‘அவா் எங்கு மறைந்துள்ளாா்; ஏன் முற்றிலும் மௌனமாக இருக்கிறாா்’ என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா்.

இந்நிலையில், ஜகதீப் தன்கா் குடியரசு துணைத் தலைவா் இல்லத்தில்தான் தொடா்ந்து தங்கியிருப்பதாகவும், அங்கு வழக்கம்போல காலை நேரத்தில் யோகாசனப் பயிற்சியில் ஈடுபடுவது, நண்பா்கள், இல்லத்தில் உள்ள ஊழியா்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடுவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறாா். மேலும், தனது குடும்பத்தினருடனும் அவா் அதிக நேரம் செலவிடுகிறாா் என்று அவருடன் தொடா்புடையவா்கள் தெரிவித்தனா்.

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள... மேலும் பார்க்க

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா். கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி ந... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

தெருநாய்கள் தொடா்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவை காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளாா். இந்த உத்தரவானது விலங்குகள் நலன் மற்றும் பொது பாது... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியா்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி கால்நடைத் துறையில் உதவியாளராக ... மேலும் பார்க்க

கேரள செவிலியா் வழக்கு: ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதி... மேலும் பார்க்க