செய்திகள் :

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க வேண்டாம்.. எடுத்தால்! ரயில்வே எச்சரிக்கை

post image

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பலரும் ரீல்ஸ் எடுப்பது அதிகரித்திருக்கும் நிலையில், ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, பொது வெளியில், ஆடிப் பாடி விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அதிலும், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில் போன்ற இடங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவது அதிகரித்துள்ளது.

சிலர், அதனையும் தாண்டி, ரயில் பெட்டிகள் மீது ஏறுவது, தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு விடியோ எடுப்பது, ரயில் வரும் வழியில், ரயிலைத் தொடும் தொலைவில் நின்றுகொண்டு விடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு, சில வேளைகளில் உயிர் பலிகளும் நேரிடுகின்றன.

இந்த நிலையில், ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வழக்கமாக, ரயில்நிலையங்களில் விடியோ எடுக்க அனுமதியில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது ஏராளமானோர் ரீல்ஸ் எடுத்துப் பதவிட்டு வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பயணிகளைக் கண்காணிக்கவும், ரீல்ஸ் எடுத்தால் அபராதமும், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அல்லது உயிருக்கு ஆபத்தான வகையில் ரீல்ஸ் எடுத்தால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் என்றும் தண்டவாளப் பகுதிகளிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Railways warns against taking reels at railway stations, fines or arrests if taken

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையி... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமான... மேலும் பார்க்க

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த 4 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினரின் முகாம் அருகி... மேலும் பார்க்க

ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு

ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த ஒரு வயது குழந்தையின் உடலை அவரது தந்தை லலித் ஆழ்துளை க... மேலும் பார்க்க

வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை: 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பறிமுதல்

புவனேஸ்வரம்: ஒடிசா மாநில வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து தங்க நாணயங்களும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 1.50 கோடி ரொக்கப் பணம் எண்ணப்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க