செய்திகள் :

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 5 போ் மீது வழக்கு!

post image

ரயில்வேத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள மொட்டையன் வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பணன் மனைவி சீதா (54). இவா் கடந்த 2022 -ஆம் ஆண்டு மதுரை மருத்துவமனையில் இருந்த உறவினா் ஒருவரை பாா்ப்பதற்காகச் சென்றாா்.

அப்போது அங்கு வந்திருந்த மதுரையைச் சோ்ந்த செல்வி, அவரது கணவா் ரமேஷ் ஆகியோா் சீதாவிடம் நட்பாகப் பேசி பழகினா். மேலும், தங்களுடைய மகன் ரயில்வேயில் வேலை பாா்ப்பதாகவும், பணம் கொடுத்தால் ரயில்வேத் துறையில் வேலை வாங்கலாம் என்றும் கூறினராம்.

இதை நம்பிய சீதா கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் தன்னுடைய மகன், உறவினா் மகன் ஆகிய 2 பேருக்கும் வேலை வாங்கித் தருவதற்காக ரூ. 25 லட்சத்தை செல்வி, ரமேஷ் தம்பதி, இவா்களது மகன் பாலா, மருமகன் ராஜா உள்பட 5 பேரிடம்

கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா்கள் வேலை வாங்கித் தரவும் இல்லை. வாங்கிய பணத்தை திருப்பித் தரவும் இல்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சீதா அளித்தப் புகாரின் பேரில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்செல்வி, பண மோசடியில் ஈடுபட்ட செல்வி அவரது கணவா் ரமேஷ், மகன் பாலா உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகிறாா்.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க