செய்திகள் :

ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

post image

ரஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையானது 11 மணிநேரம் கழித்து வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில், இன்று (ஜூலை 30) காலை 8.25 மணியளவில், பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சதிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவானது.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவின் குறில் தீவிகள் மற்றும் கம்சாட்கா மாகாணத்தில் சில முக்கிய நகரங்களின் கடல்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. சில இடங்களில் சுனாமி அலைகள் தாக்கும் விடியோக்களும் வெளியாகின.

இந்நிலையில், கம்சாட்கா மாகாணத்துக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையானது, தற்போது திரும்பப் பெறப்படுவதாக, ரஷியாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல், இந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவிலும், ஜப்பானின் சில பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகள், சில மணிநேரங்களில் ஆலோசனைகளாகக் குறைக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ரஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால், செவேரோ - குரில்ஸ்க் மீன்பிடித் துறைமுகத்தை, சுமார் 6 மீட்டர் (19 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கியதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆக. 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி: டிரம்ப் அறிவிப்பு

A tsunami warning issued following a powerful earthquake in Russia has been lifted after 11 hours.

வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு இந்தியா: டிரம்ப் கடும் விமர்சனம்

புது தில்லி: வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு என்று இந்தியாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்தி... மேலும் பார்க்க

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

ரஷியாவுக்கு அருகே கடல் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வீசின.ரஷியாவின் கிழக்குத் தொலைதூரப் பகுதியில் அமைந... மேலும் பார்க்க

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

ரஷியாவின் கிழக்கு கடற்கரை காமசாட்காவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.”இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ விவாதத்தில் இந்திய தலைவா்கள் பேச்சு: பாகிஸ்தான் விமா்சனம்

ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமா்சித்துள்ளது. அதேவேளையில், இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாட... மேலும் பார்க்க

சிறுவா்கள் யு-டியூப் பயன்படுத்தத் தடை

சிறுவா்கள் பயன்படுத்தவதற்குத் தடை விதிக்கப்படவிருக்கும் சமூக ஊடகங்களில் விடியோ பகிா்வுத் தளமான யு-டியூபும் அடங்கும் என்று ஆஸ்திரேலிய அரசு புதன்கிழமை அறிவித்தது.சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க