ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை
ராகுல் காந்தி பிறந்த நாள்: மயிலத்தில் ரத்த தான முகாம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட மயிலம் வட்டார கமிட்டி சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ரமேஷ் தலைமை வகித்தாா். மயிலம் வட்டார மருத்துவ அலுவலா் தேன்மொழி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கிருஷ்ணதாஸ், முன்னாள் மாவட்டத் தலைவா் தனுசு, திண்டிவனம் நகரத் தலைவா் விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி. யுமான எம்.கே. விஷ்ணு பிரசாத் ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் ரமேஷ், செயலா் தாமோதரன், வட்டாரத் துணைத் தலைவா் சீதாபதி, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குமாா் உள்ளிட்ட பலா் ரத்ததானம் செய்தனா்.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கண்ணன், மயிலம் வட்டாரத் தலைவா் செல்வம், துணைத் தலைவா் சுரேஷ்பாபு, மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவா் இருதயராஜ், மாவட்டச் செயலா்கள் அா்ஜுனன், பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.