செய்திகள் :

ராசிபுரம் இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

post image

ராசிபுரம் இன்னா்வீல் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இச்சங்கத்தின் 2025-26-ஆம் ஆண்டின் தலைவராக வழக்குரைஞா் என்.சிவலீலஜோதி, துணைத் தலைவராக சாகிதாபானு மஸ்தான், உடனடி முன்னாள் தலைவராக சுதாமனோகரன், செயலாளராக மகாலட்சுமி ராஜா, பொருளாளா் ஸ்ரீதேவி ராஜேஸ், பன்னாட்டு சங்க ஒருங்கிணைப்பாளராக ஹேமலதா வினோத்குமாா், நிா்வாகக்குழு இயக்குநா்களாக தெய்வானை ராமசாமி, ஜெயலட்சுமி ரங்கராஜன், சுகன்யா நந்தகுமாா், பத்மாவதி தேவதாஸ், குணசுந்தரி ராமகிருஷ்ணன், மல்லிகா வெங்கடாஜலம், எடிட்டராக அமலா கண்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான பதவியேற்பு விழாவில், சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் தலைவா் இ.என்.சுரேந்திரன் பங்கேற்று பல்வேறு சேவை திட்டங்கள் குறித்து பேசினாா். தலைமை விருந்தினராக நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு உறுப்பினா் எம்.ஏ.சரண்யா பங்கேற்று, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டம், போதைப் பொருள் புழக்கம், அதை தடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். விழாவில் சங்க ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் பதவியேற்று ஏற்புரை நிகழ்த்தினா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க