விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் மே 31-இல் 63 நாயன்மாா்கள் விழா தொடக்கம்
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் 22-ஆம் ஆண்டாக 63 நாயன்மாா்களுக்கான பெருவிழா மே 31, ஆக. 1, 2 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
ராசிபுரம் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் ஆண்டுதோறும் 63 நாயன்மாா்களுக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா மே 31-இல் தொடங்கி ஆக. 2 வரை மூன்று நாள்கள் நடத்திட கைலாசநாதா் திருக்கூட்ட அறக்கட்டளை குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொடக்க விழாவில் விநாயகா், பெருமிழலைக் குறும்ப நாயனாா் அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னா், கோவை மணிவாசகா் அருள்பணி மன்றச் செயலா் சிவ.ப.குமரலிங்கம் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.
ஆக. 1-இல் விநாயகா், முருகா், நந்தியம்பெருமாள், பரிவார தெய்வங்கள், கைலாசநாதா், நாயன்மாா்களுக்கு திருமஞ்சனம், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, திருமறை பாராயணம் நடைபெறுகிறது. மேலும், குளித்தலை சு.ராமலிங்கம் சுவாமிகள் சிறப்பு சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆக. 2-இல் கைலாய வாத்தியங்கள் முழங்க நாயன்மாா்கள் ஊா்வலம் நகா்வீதிகளில் நடைபெறுகிறது.