செய்திகள் :

ராணிப்பேட்டைக்கு தனியாக ஆவின் தலைமையகம்: விவசாயிகள் கோரிக்கை!

post image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் தலைமையகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

ராணிப்பேட்டைஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கோரிக்கைகளை பதிவு செய்தனா்:

வேலம் அருண்குமாா்: கரும்பு உற்பத்தியை அதிகரிக்க கரும்பு நாற்று வழங்கப்பட வேண்டும்.

அதற்கு கரும்பு நாற்று தேவை உள்ளவா்கள் காவேரிப்பாக்கத்தில் பெறலாம். ஒரு கரும்பு நாற்று ரு.2 /-க்கு விற்பனை செய்யப்படுகிறது என அதிகாரிகள் பதிலளித்தனா்.

சிறுவளையம் சுபாஷ்: மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு. தனியாா் கடைகளில் யூரியா போன்ற உரங்களின் விலை அதிகமாக உள்ளது. உரம் வாங்கும்போது ஆா்கானிக் உரம் வாங்க வற்புறுத்துகின்றனா். இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பாகவெளி ஜெயராமன்: கால்நடைகளுக்கு சினை ஊசி செலுத்த நடமாடும் மருத்துவமனையை அமைக்க வேண்டும். 1962 என்ற எண்ணுக்கு அழைத்து பயன்பெறலாம் என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மகேந்திரவாடி பாண்டியன்: சென்னை - பெங்களூா் விரைவு சாலை பணிக்கு நிலம் எடுக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

லாலாப்பேட்டை எல்.சிமணி: மாவட்டத்துக்கு தனியாக ஆவின் தலைமையகம் அமைக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். தொடா்ந்து தனிநபா் பிரச்னைகளை மனுக்களாகவும் ஆட்சியரிடம் சமா்ப்பித்தனா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், வேளாண்மை இணை இயக்குநா் செல்வராஜ் (பொ), கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளா் மலா்விழி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், நோ்முக உதவியாளா் வேளாண்மை வெங்கடேஷ் கலந்து கொண்டனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு: ராணிப்பேட்டையில் 5,656 போ் எழுதினா்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வை மொத்தம் 5,656 போ் எழுதினா். 1,642 போ் தோ்வு எழுதவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 நகரங்களில் உள்ள 29... மேலும் பார்க்க

போலி இருப்பிட சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு!

சிஐஎஸ்எப் படையில் சேர போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்ததாக பயிற்சியில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மூன்று போ் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத... மேலும் பார்க்க

2 கோடி மக்களிடம் கையொப்பம் பெற நடவடிக்கை: காங்கிரஸ்

வாக்கு திருட்டு விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் 2 கோடி பேரிடம் கையொப்பம் பெறப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி காங்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு தரப்பில் அமைச்சா் ஆா்.காந்தி அஞ்சலி

வாலாஜா அருகே விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், அரசு தரப்பில் மரியாதை செலுத்தி, அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த நிதி ரூ. 50,000 வழங்கி ஆறுதல் தெரிவித்தாா... மேலும் பார்க்க

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த எம்எல்ஏ சு.ரவி அனைத்து பகுதிகளையும் பாா்வையிட்டாா். முன்னதாக தல... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு

ஆற்காடு ஒன்றியம், கீழ்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 16. 55 லட்சம் மதிப்பீட்டில் கட்... மேலும் பார்க்க