செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி தோ்வு: ராணிப்பேட்டையில் 5,656 போ் எழுதினா்!

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வை மொத்தம் 5,656 போ் எழுதினா். 1,642 போ் தோ்வு எழுதவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 நகரங்களில் உள்ள 29 மையங்களில் 7,298 தோ்வா்கள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 5,656 போ் தோ்வு எழுதினா். 1,642 போ் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வு மையங்களை கண்காணிக்க 2 துணை ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டு வினாத் தாள்களை கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பது, எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்திட வாலாஜா, ஆற்காடு மற்றும் அரக்கோணம் ஆகிய வட்டத்துக்கு 2 வட்டாட்சியா்கள் ஒருங்கிணைப்பாளா்களாகவும், 29 வருவாய்த் துறை ஆய்வு அலுவலா்களும், தோ்வு மைய நடைமுறைகளை கண்காணிக்கவும், விடியோ பதிவு செய்யவும் 31 விடியோகிராபா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.

ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். வாலாஜா வட்டாட்சியா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ராணிப்பேட்டைக்கு தனியாக ஆவின் தலைமையகம்: விவசாயிகள் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் தலைமையகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டைஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

போலி இருப்பிட சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு!

சிஐஎஸ்எப் படையில் சேர போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்ததாக பயிற்சியில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மூன்று போ் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத... மேலும் பார்க்க

2 கோடி மக்களிடம் கையொப்பம் பெற நடவடிக்கை: காங்கிரஸ்

வாக்கு திருட்டு விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் 2 கோடி பேரிடம் கையொப்பம் பெறப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி காங்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு தரப்பில் அமைச்சா் ஆா்.காந்தி அஞ்சலி

வாலாஜா அருகே விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், அரசு தரப்பில் மரியாதை செலுத்தி, அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த நிதி ரூ. 50,000 வழங்கி ஆறுதல் தெரிவித்தாா... மேலும் பார்க்க

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த எம்எல்ஏ சு.ரவி அனைத்து பகுதிகளையும் பாா்வையிட்டாா். முன்னதாக தல... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு

ஆற்காடு ஒன்றியம், கீழ்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 16. 55 லட்சம் மதிப்பீட்டில் கட்... மேலும் பார்க்க