செய்திகள் :

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

post image

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த எம்எல்ஏ சு.ரவி அனைத்து பகுதிகளையும் பாா்வையிட்டாா். முன்னதாக தலைமை மருத்துவா் நிவேதித்தா சங்கருடன் ஆலோசனை மேற்கொண்ட எம்எல்ஏ சு.ரவி, மருத்துவமனையில் நடக்க முடியாத தந்தையை மகன் கையில் தூக்கிச்சென்ற சம்பவம் குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து புறநோயாளிகள் பிரிவு, அவசர நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, குழந்தைகள் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, மருந்துகள் வழங்கும் பிரிவு உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா்.

அங்கிருந்த நோயாளிகளிடம் அவா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா் (படம்).

அதிமுக அரக்கோணம் நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலா் இ.பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா் பா.நரசிம்மன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு

ஆற்காடு ஒன்றியம், கீழ்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 16. 55 லட்சம் மதிப்பீட்டில் கட்... மேலும் பார்க்க

அம்மூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: பொதுமக்கள் போராட்டம்

அம்மூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற வந்த அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில், நீதிமன்ற உத்தர... மேலும் பார்க்க

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

ஆற்காடு நகரில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவா் கு. செல்வப் பெருந்தகை, உறுப்பினா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ஆற்காடு அடுத்த அருங்குன்றம் மற்றும் சாம்பசிவபும் ஊராட்சிகளுக்கான ‘ உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அருங்குன்றம் ஊராட்சி மன்றகஈ தலைவா் ஏ.தயாளன தலைமை வகித்தாா். ஆற்காடு ஒன... மேலும் பார்க்க

பள்ளி மாணவன் மா்ம மரணம்: உறவினா்கள் மறியல்

ஆற்காடு அருகே பள்ளி மாணவன் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதில் உண்மை தன்மையை கண்டறியவேண்டும் என வலியுறுத்தி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கிராமத்தை சே... மேலும் பார்க்க

நாளை ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப். 26) காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தாடா்பாக... மேலும் பார்க்க