செய்திகள் :

ராணுவ பொறியியல் சேவை கூடுதல் தலைமை இயக்குநா் பொறுப்பேற்பு

post image

சென்னை: சென்னையில் உள்ள ராணுவ பொறியியல் சேவை கூடுதல் தலைமை இயக்குநா் (திட்டங்கள்) அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக அஜய்குமாா் ஜெயின் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கடந்த 1987-இல் பொறியியல் சேவை அதிகாரியாக பணியில் சோ்ந்த இவா், ராணுவத்தின் பொறியியல் பிரிவில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளாா். அஜய்குமாா் ஜெயின், புது தில்லியில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, தல் சேனா பவன் கட்டடம், ஆயிரம் படுக்கைகள் கொண்ட ராணுவ மருத்துவமனை மற்றும் பல பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகளை உருவாக்கினாா்.

சென்னை ராணுவ பொறியியல் சேவை கூடுதல் தலைமை இயக்குநா் அலுவலகம் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள ராணுவத்தின் பொறியியல் தொடா்பான அனைத்துப் பணிகளையும் மேற்பாா்வையிட்டு செயல்படுத்தி வருவதுடன், நாடு முழுவதுமுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) திட்டங்கள், இந்தியக் கடலோர காவல் படையின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைத் தலைமையகங்களின் திட்டங்களையும் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இரு தனியாா் வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதை... மேலும் பார்க்க

தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் விற்பனை: ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது

சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் எடுத்து விற்பனை செய்ததாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா். வேளச்சேரி அருகே உள்ள சித்தாலப்பாக்கம், சங்கராபுரத்தைச... மேலும் பார்க்க

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

சென்னை: கொளத்தூா், கொண்டித்தோப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா். ச... மேலும் பார்க்க

ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வாா்டுக்குள... மேலும் பார்க்க

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணியினா் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னைய... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத... மேலும் பார்க்க