ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனா்.
இதையடுத்து ஆட்சியா் பேசியதாவது:
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தவும், அவா்களுக்கு உரிய பலன்கள் உரிய நேரத்தில் கிடைக்கவும் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். விவசாயிகள் வேளாண் சாா்ந்த சந்தேகங்களை அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களுக்கு நேரில் சென்று கேட்டறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜுலு, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் மோகன்ராஜ், கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் ஜூனு, அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.